முதன்முறையாக ஒரே நாளில் 27,114 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது; 22,123 பேர் பலி

தினகரன்  தினகரன்
முதன்முறையாக ஒரே நாளில் 27,114 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது; 22,123 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது. உலகையே  ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 27,114 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 22,123 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 519  உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,15,386 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,873 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,38,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,893 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,32,625 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில்  உள்ளது. தமிழகத்தில் 1,30,261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,829 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 82,324 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,09,140 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 84,694 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை