சிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது...!!!

தினகரன்  தினகரன்
சிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆளும் கட்சி ஆட்சியை பிடித்தது. சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, பிரதமர் லீ செய்ன் லுாங் ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே பொதுத் தேர்தலை அறிவித்தார். இதன்படி, கொரோனா பாதிப்பால் முக்கிய நிகழ்வுகளை உலக நாடுகள் தள்ளிப்போடும் நிலையில், அதைத்தொடர்ந்து நேற்று சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.நாட்டின் 26.5 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்நாட்டில் வாக்களிக்க வேண்டியது கட்டாயமாகும். இதனையடுத்து, நேற்று காலை 8:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 8:00 மணி வரை நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். கொரோனா பரவல் காரணமாக வாக்காளர்களுக்கு முககவசமும் கையுறையும் வழங்கப்பட்டன. தனி மனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக வாக்களித்தனர். தொடர்ந்து பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், ஆளும் \'மக்கள் செயல் கட்சி, மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மக்கள் செயல் கட்சி, 61.24% விகிதம் பெற்றது. கடந்த 2015-ம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 69.9% குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியான \'வொர்க்கர்ஸ் பார்ட்டி\' கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பிரித்தம் சிங், பார்லி., எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 1950ம் ஆண்டின் இறுதியில் இருந்து மக்கள் செயல் கட்சி தொடர்ந்து வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் லீ செய்ன் பேட்டி:வெற்றிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுாங், பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததற்கு அனைத்து மக்களுக்கும் நன்றி. வாக்கு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், எங்கள் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு உள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. கொரோனா நெருக்கடி காலத்தில், மக்கள் எதிர்நோக்கிய வலி, பதற்றத்தையும் முடிவுகள் காட்டுகிறது\' என்றார்.

மூலக்கதை