சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு: சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் பேட்டி

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு: சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் பேட்டி

தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். மாஜிஸ்திரேட் பறிமுதல் செய்த சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி பதிவுகளை நீதிமன்றமும், தடயவியல் துறையும் ஆய்வு மேற்கொள்ளும். தந்தை, மகன் சித்தரவதை மரணம் தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை