கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைவதற்கு அனுமதி அளிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
சென்னை: கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைவதற்கு அனுமதி அளிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பழுது பார்ப்பதற்கு கன்னியாகுமரி மீனவர்களுக்கு அனுமதி தர வேண்டும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் கேரளாவில் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.