ஆஸ்திரேலியாவில் கொரோனா 2ம் அலை; கட்டுப்படுத்த ஆறு வார ஊரடங்கு

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலியாவில் கொரோனா 2ம் அலை; கட்டுப்படுத்த ஆறு வார ஊரடங்கு

மெல்போர்ன்: கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்கா, இத்தாலி நாடுகளில் பரவியதைப் போலவே, ஆஸ்திரேலியாவிலும் மிகவும் வேகமாகப் பரவியது. அங்கு பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால், கடந்த மே மாத இறுதியில், கொரோனா பரவல், 75 சதவீதம் கட்டுக்குள் வந்தது. இதனால், ஆஸ்திரேலியா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, கடந்த 10 நாள்களுக்கு முன் தளர்த்தப்பட்டது; மக்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டனர்.



இதனால், கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவின் 2வது பெரிய நகரமாக மெல்போர்னில், கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் மாதம் முதல் எப்போதும் இல்லாதவகையில் கடந்த நேற்று ஒரே நாளில், 191 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

'ஆஸ்திரேலியாவில் இதுவரை, 8,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 106 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், ஊரடங்கு தளர்வால், கொரோனாவின் இரண்டாவது அலை உருவாக வாய்ப்புள்ளது. இதைத்தடுக்க, அடுத்து வரும் ஆறு வாரங்களுக்கு மெல்போர்னில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது' என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இன்று (7ம் தேதி) நள்ளிரவு துவங்கும் இந்த ஊரடங்கில், மக்கள் வீட்டை விட்டு வெளியேறவும் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


விக்டோரியா மாகாணத்திலும் வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக, விக்டோரியா மற்றும் மெல்போர்ன் மாகாணங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு முன், கடந்த 1919ல் ஆஸ்திரேலியாவில் ஸ்பானிஸ் புளூ பரவியபோது இந்த மாகாணங்களின் எல்லைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை