டெல்லியில் இன்று ஒரே நாளில் 2505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
டெல்லியில் இன்று ஒரே நாளில் 2505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் 2505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,200-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,004-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 2632 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 68,256-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை