நேபாள பிரதமருக்கு நெருக்கடி
காட்மாண்டு: நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழ கூட்டம் இனறு நடைபெற உள்ளது. இதில், பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கட்சித்தலைவர் அல்லது பிரதமர் பதவியை விட்டு விலகுவது குறித்து இறுதி முடிவு எடுக்க பெரும்பான்மை உறுப்பினர்கள் தயாராகிவிட்டனர். அதனால், ஷர்மா ஒலி ஏதாவது ஒரு பதவியை துறப்பது குறித்து இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.