பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.
வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.


இது குறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் டிரப்ம் கூறுகையில், ''கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய், தான் இது. சீனா, கொரோனா வைரஸ் பரவாமல் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் பரவ அனுமதித்து விட்டனர். அந்த நேரத்தில் தான் நாங்கள் புதிதாக வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தோம். கையெழுத்தான மையின் ஈரம் காய்வதற்கு முன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றார்.


மூலக்கதை