தமிழகத்தில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392-ஆக அதிகரித்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 3,095 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,021-ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை