சிறந்த துவக்க வீரர் ரோகித் * ஸ்ரீகாந்த் பாராட்டு | ஜூன் 30, 2020

தினமலர்  தினமலர்
சிறந்த துவக்க வீரர் ரோகித் * ஸ்ரீகாந்த் பாராட்டு | ஜூன் 30, 2020

புதுடில்லி: ‘‘ஒருநாள் அரங்கின் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவர் ரோகித் சர்மா,’’ என ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா 33. இதுவரை 224 ஒருநாள் (9,115 ரன், 29 சதம்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஒருநாள் அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன் (264) எடுத்த வீரர் என உலக சாதனை படைத்த ரோகித், 3 முறை இரட்டை சதம் அடித்தார்.

துவக்க வீரராக 140 ஒருநாள் (7,148 ரன், 27 சதம்) போட்டிகளில் களமிறங்கினார். அதிவேகமாக 7,000 ரன் எடுத்த துவக்க வீரர் வரிசையில் சச்சின் (இந்தியா), ஆம்லாவை (தெ.ஆப்.,) பின்தள்ளினார்.

ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதம் (5, 2019) அடித்த வீரர் என வரலாறு படைத்தார்.

இவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் 60, கூறியது:

உலக கிரிக்கெட் அரங்கில் ஒருநாள் போட்டிகளின் சிறந்த துவக்க வீரர்களில் ரோகித் சர்மாவும் ஒருவர். மூன்று இரட்டை சதம் உட்பட பல்வேறு சதங்கள் விளாசிய இவருக்கு, ‘டாப்–3’ அல்லது வரலாற்றின் சிறந்த ஐந்து துவக்க வீரர்களில் ஒருவராக இருப்பதற்கு தகுதி உள்ளது.

இது மிகவும் ஆச்சரியமானது. பொதுவாக ஒருநாள் போட்டிகளில் நீங்கள் 150, 180, 200 என்று விளாசும் போது, உங்கள் அணியின் ஸ்கோர் எங்கே செல்லும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ரோகித்தின் சிறப்பு இது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை