கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி; கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 3. 21 லட்சத்தை தாண்டியும் இறப்பு எண்ணிக்கை 9,195 ஆகவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் டில்லி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

கடந்த இதைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. மாறாக தற்போது கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா நான்காம் இடத்துக்கு முன்னேறி உள்ளது நேற்று டில்லியில் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.

அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கொரோனா பரவுதல் அதிகரிப்பதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டன.



இன்று காலையும், மேற்கண்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆளுநருடன் கொரோனா பாதிப்பு குறித்து இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்த கூட்டங்களில் கொரோனா பரவுதலைக் கட்டுக்குள் கொண்டு வர மருத்துவச் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளைத் தீவிர படுத்துவது குறித்து வலியுறுத்தப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அவசரக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராகும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு அறிவித்தது.

பிரதமர் மோடியின் அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்களை தொடர்ந்து, அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் 16, 17ம் தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11,929 பேர் பாதிக்கப்பட்டும், 311 பேர் இறந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை