பாக்., கில் ஒரே நாளில் 4,734 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
பாக்., கில் ஒரே நாளில் 4,734 பேருக்கு கொரோனா

இஸ்லாமாபாத்: பாக்.,கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,374 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,983 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 97 பேர் பலியான நிலையில் கொரோனாவால் இதுவரை மொத்தம் 1,935 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 59,467 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை மொத்தம் 32,581 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 35,308 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சிந்து மாகாணத்தில் 34,889 பேரும், வடமேற்கு கைபர் பக்துன்க்வாவில் 12,549 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.


தென்மேற்கு பலுசிஸ்தானில் 5,776 பேருக்கு கொரோனா உறுதியானது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இதுவரை 4,323 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பாக்கில் இதுவரை 6,60,508 சோதனைகள் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மூலக்கதை