தமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் உணவகங்கள் 8ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அனைத்து உணவகங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தக் கூடாது. உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி கொண்டு நன்றாக கைகளை சுத்தம் செய்த பிறகே உணவகத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். நான்கு நபர்கள் அமரும் வகையில் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும். உணவகங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

மூலக்கதை