இந்தியாவில் ஜூலை மாதம் மற்றொரு வெட்டுக்கிளி படையெடுப்பு: ஐ.நா., எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
இந்தியாவில் ஜூலை மாதம் மற்றொரு வெட்டுக்கிளி படையெடுப்பு: ஐ.நா., எச்சரிக்கை

ஜெனிவா: ஜூலை மாதம் இந்தியாவில் மற்றும் ஒரு வெட்டுக்கிளி படையெடுப்பு இருக்கும் என்று ஐ.நா., எச்சரித்துள்ளது.


கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் பல்கிப் பெருகிய வெட்டுக்கிளிக் கூட்டம் அங்கிருந்து அரேபிய பாலைவனத்துக்கு வந்து பாக்கிஸ்தான் வழியாக மே மாதத்தில் இந்தியாவுக்குள் நுழைந்தது.

ராஜஸ்தான், ம.பி., மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெட்டுகிளி படையெடுப்பால் சேதமடைந்தன.


இந்நிலையில் கிழக்கு ஆப்பரிக்க நாடுகளிலும், ஈரானிலும் வளர்ந்து வரும் இரண்டாம் தலைமுறை வெட்டுக்கிளிகள் கூட்டம் ஜூன், ஜூலை மாதங்களில் ராஜஸ்தான் பாலைவனத்திற்கு படையெடுக்கும் என ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மூலக்கதை