சபரிமலையில் 8 முதல் தரிசனம்

தினகரன்  தினகரன்
சபரிமலையில் 8 முதல் தரிசனம்

திருவனந்தபுரம்:  திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டி: கேரளாவில் வரும் 8ம் தேதி முதல் நிபந்தனைகளுடன் வழிபாட்டு தலங்கள், ஒட்டல்கள், மால்கள் திறக்கப்படும். 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் 10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் அனுமதி இல்லை. கூட்டமாக அமர்ந்து இசை கச்சேரி, கீர்த்தனைகள் பாடக் கூடாது. கோயில்களில் அன்னதானம், சாதம் ஊட்டுதுல் நடத்தக்கூடாது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரே நேரத்தில் 50 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு நேரடியாக பிரசாதம் வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை