நாமக்கல் முட்டை விலை 390 காசாக உயர்ந்தது

தினகரன்  தினகரன்
நாமக்கல் முட்டை விலை 390 காசாக உயர்ந்தது

நாமக்கல்: மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலை உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 390 காசாக என்இசிசி  நிர்ணயம் செய்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் 10 காசுகள் நேற்று உயர்த்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஒரு  முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 390 காசாக என்இசிசி  நிர்ணயம் செய்துள்ளது. நாட்டின் மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.  ஒரே வாரத்தில் முட்டை விலை 35 காசு வரை உயர்ந்துள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் வாரங்களில் முட்டை விலை தொடர்ந்து உயரும் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை