மதுபானம் விற்பனை ஆசாமி கைது

தினகரன்  தினகரன்
மதுபானம் விற்பனை ஆசாமி கைது

உத்திரமேரூர்: சாலவாக்கம் போலீசார், உத்திரமேரூர் அடுத்த சமத்துவபுரம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மோகன் (40) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

மூலக்கதை