பாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
பாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா

இஸ்லாமாபாத்: பாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89,249 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் கொரோனாவுக்கு 68 பேர் பலியானதையடுத்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,838 ஆக உயர்ந்தது. அதே நேரம் கொரோனாவிலிருந்து இது வரை 31,198 பேர் குணமைடைந்தனர்


ஊரடங்கு தளர்வுக்கு பின் பாக்.கில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சிந்து மாகாணத்தில் 33,536 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 33,144 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் 11,890 பேரும், பலூசிஸ்தானில் 5,582 பேரும் கில்கிட்-பால்டிஸ்தானில் 852 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மூலக்கதை