சவுதியில் 2,591 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
சவுதியில் 2,591 பேருக்கு கொரோனா

ரியாத் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 2,591 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 31 பேர் பலியாகினர் என அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்தது.


கொரோனா வைரசின் தாக்கம் சவுதி அரேபியாவில் சற்று அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசும் பல்வேறு கட்டங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்கிறது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை கூறுகையில், சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) மேலும் 2,591 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95,748 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 31 பேர் நோய் தொற்றால் பலியாகினர். தொடர்ந்து இதுவரை சவுதியில் 642 பேர் பலியாகினர்.


சவுதியில் 1,651 பேர் முழுமையாக குணமடைந்தனர். நாட்டில் இதுவரை குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 70,616 ஆக உயர்ந்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் ரியாத்தில் 719 பேர், ஜெட்டாவில் 459 பேர், மற்றும் தீவிர சிகிச்சையில் 1,412 பேர் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை