செந்துறை அருகே சோகம்: குளத்தில் மூழ்கி அக்கா, தம்பி சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
செந்துறை அருகே சோகம்: குளத்தில் மூழ்கி அக்கா, தம்பி சாவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குளத்தில் மூழ்கி அக்கா, தம்பி பரிதாபமாக இறந்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார்.

விவசாயி. இவரது மனைவி ஐஸ்வர்யா.

இவர்களது குழந்தைகள் பிருந்தா (10), கிரிதரன் (8). செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் பிருந்தா 4ம் வகுப்பும், கிரிதரன் 2ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை அக்காவும், தம்பியும், தாத்தா பஞ்சமுத்து (60) என்பவருடன் அருகேயுள்ள அய்யனார் குளத்தில் மாட்டை குளிப்பாட்ட சென்றுள்ளனர்.

அப்போது குழந்தைகளும் குளித்துள்ளனர்.

ஆழமான இடத்திற்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கி அலறி துடித்தனர். அருகிலிருந்தவர்கள், மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனையில், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரது உடல்களும் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து செந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை