பெருந்துறை அருகே பரிதாபம்: 3 மாத பெண் குழந்தையை கொன்று தாயும் தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெருந்துறை அருகே பரிதாபம்: 3 மாத பெண் குழந்தையை கொன்று தாயும் தற்கொலை

பெருந்துறை: பெருந்துறை அருகே 3 மாத பெண் குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சாவடிப்பாளையம், மூங்கில்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (38).

விவசாயி. இவரது மனைவி சங்கீதா (34).

இவர்களது மகள் நிதர்சனா (9). கடந்த 3 மாதத்துக்கு முன்பு சங்கீதாவுக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இதனால் மனமுடைந்து காணப்பட்டார். பிறந்த குழந்தைக்கு பெயர்கூட வைக்கவில்லை.



இந்நிலையில், நேற்றிரவு 8 மணிக்கு மூத்த மகள் நிதர்சனா, உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் சங்கீதா, தனது 3 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று அண்டாவுக்குள் வைத்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை