கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க டாஸ்மாக் மூட கோரிக்கை
திருவள்ளூர்: எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் ஊராட்சி தலைவர் எல். சுகந்திராணி லிங்கன் தலைமையில் துணை தலைவர் கணபதி, வார்டு உறுப்பினர்கள் கோட்டீஸ்வரன், சீனிவாசன், காஞ்சனா, வசந்தா ஆகியோர் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்த கோரிக்கை மனு: வெங்கல் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் நகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஊராட்சியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளுக்கு அதிகளவில் குடிமகன்கள் வந்து மதுஅருந்திவிட்டு செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊராட்சியில் உள்ள 3 மதுபான கடைகளையும் தற்காலிகமாக மூடி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
.