மதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா நல்லெண்ண தூதராக அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா நல்லெண்ண தூதராக அறிவிப்பு

மதுரை: மதுரை மேலமடையை சேர்ந்தவர் மோகன். சலூன் கடை உரிமையாளர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தனது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ. 5 லட்சத்தில், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டவைகளை வாங்கி, 1,500க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு வழங்கினார். மோகன் மற்றும் நேத்ராவுக்கு தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.



இதையடுத்து, அமைச்சர் ஆர். பி. உதயகுமார், இவரை பாராட்டி ரூ. 50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கினார்.

இதற்கிடையே மோகனின் மகளான நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ. நா சபை (வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு) அறிவித்துள்ளது.

அவருக்கு ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கியுள்ளது.

.

மூலக்கதை