ஆத்தூர் அருகே பரிதாபம் கார்கள் மோதி 3 பேர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆத்தூர் அருகே பரிதாபம் கார்கள் மோதி 3 பேர் பரிதாப பலி

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கீரிப்பட்டி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(50). விவசாயி.

இவரது மனைவி வரலட்சுமி (40). இவர்களது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால் நேற்று மதியம் சிவக்குமார், வரலட்சுமி மற்றும் உறவினர் சாந்தி(40) ஆகியோர் ஒரு காரில் தம்மம்பட்டிக்கு சென்றனர்.

குழந்தைக்கு கால் கொலுசு உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பினர். கணவாய்காடு பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த காரும் சிவக்குமார் ஓட்டிச்சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது.

இதில் இரண்டு கார்களும் நொறுங்கி, காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதில் சிவக்குமார், உறவினர் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வரலட்சுமியை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி வரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு காரில் வந்த நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் கனகவேல் (50), அவரது மனைவி தவமணி (42), டிரைவர் சுப்ரமணி (37), திவாகர், கீர்த்தி, சூர்யா மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த விபத்து குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை