மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம்
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளார். சென்னை-திருச்சி தேசிய செடுஞ்சாலையில் முன்னால் சென்ற பேருந்து மீது மற்றொரு அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. முன்னால் சென்ற பேருந்து சாய்ந்ததில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.