பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது: வேல்முருகன்

தினகரன்  தினகரன்
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது: வேல்முருகன்

சென்னை: பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாடினார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்துக்குள் கணினி நிபுணர்கள் வந்து செல்ல திடீர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பாடம் நடத்த 3 கணினி நிபுணர்கள் அனுமதித்து உள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. கணினி நிபுணர்கள் அனுமதித்தது பற்றி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் அளித்துளேன். தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகாரை அனுப்பியுள்ளேன் எனவும் கூறினார்.

மூலக்கதை