வங்கதேசமுன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு கொரோனா
டாக்கா : வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானது, நேற்று நடந்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் அண்டை நாடான வங்க தேசத்தில், மூன்று முறை பிரதமராக இருந்தவர், வங்கதேச தேசியவாத கட்சி தலைவர் கலீதா ஜியா, 74. ஊழல் குற்றச்சாட்டில், இவருக்கு, 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு, கொரோனா பரவல் காரணமாக, வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், கடந்தாண்டு ஆறு மாத 'பரோல்' வழங்கப்பட்டது.கடந்த மாதம், மேலும் ஆறு மாதங்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கலீதா ஜியா கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானது, நேற்று நடந்த பரிசோதனையில்உறுதியானது.