இந்தோனேஷிய நிலநடுக்கம்:8 பேர் பலி
மலாங் : தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில், நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மலாங் நகரில் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் பீதியடைந்து, வீடுகளை விட்டு வெளியேறினர்.இந்த நிலநடுக்கத்தால், எட்டு பேர் பலியாகி விட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 300க்கும் அதிகமான வீடுகளும் சேதமடைந்தன.