விழுப்புரத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 15,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 113 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 238 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 15,721 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 15,370 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11,026 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 100 - க்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்ததில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 11,050 ஆக உயந்தது. இதில், 10,843 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர் இறந்தனர். 99 பேர் சிகிச்சையில் உள்ளனர்.