இந்தியா மீது 'சைபர்' தாக்குதல்: அமெரிக்க எம்.பி., கண்டனம்

தினமலர்  தினமலர்
இந்தியா மீது சைபர் தாக்குதல்: அமெரிக்க எம்.பி., கண்டனம்

வாஷிங்டன்: 'இந்திய மின் நிலையங்களின் கணிகளை ஊடுருவி, சீனா, வைரஸ் தாக்குதல் நடத்த முயன்ற விவகாரத்தில், இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க செயல்பட வேண்டும்' என, அமெரிக்க எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் முக்கிய நீர் மின் உற்பத்தி நிலையங்கள், துாத்துக்குடி மற்றும் மும்பை துறைமுகங்களின் கணினிகளை ஊடுருவி, சைபர் தாக்குதலில் ஈடுபட, சீனா கடந்த ஆண்டு முயன்றதாக, அமெரிக்க ஆய்வு நிறுவனம், சமீபத்தில் தகவல் வெளியிட்டது.

இது குறித்து, அமெரிக்க எம்.பி., பிராங்க் பலோன் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று காலத்தில், இந்திய மின் நிலையங்கள் மீது, சைபர் தாக்குதல் நடத்தி, மருத்துவமனைகளில் மின் தடை ஏற்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நம் நட்பு நாடான இந்தியாவுக்கு ஆதரவாக, அதிபர் ஜோ பைடன் அரசு செயல்பட வேண்டும். சீனாவின் இதுபோன்ற ஊடுருவல் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளை, நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை