மின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாப பலி

தினகரன்  தினகரன்
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாப பலி

சென்னை: தாம்பரம் அடுத்த சக்தி நகர் ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வரதன்(45). கூலி தொழிலாளி. இவரது மனைவி நிஷா(32). இவர்களது மூத்த மகன் கவுதம்(8). நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில், விளையாடுவதற்காக சென்றான். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின் கம்பத்தில் உரசியதில்  மின்சாரம் பாய்ந்து பலியானான்.

மூலக்கதை