தனியார் ஒட்டலில் நடந்த மது விருந்தில் நகராட்சி உறுப்பினர்கள் குத்தாட்டம்: வைரலாகும் வீடியோவால் சர்ச்சை

தினகரன்  தினகரன்
தனியார் ஒட்டலில் நடந்த மது விருந்தில் நகராட்சி உறுப்பினர்கள் குத்தாட்டம்: வைரலாகும் வீடியோவால் சர்ச்சை

குண்டல்பேட்டை: குண்டல்பேட்டை நகராட்சி உறுப்பினர்கள் தனியார் ரிசார்ட் ஒன்றில் மது விருந்து வைத்து கும்மாளமிட்ட வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம, குண்டல்பேட்டையில் சமீபத்தில் நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் கிரிஷ் என்பவர் வெற்றி பெற்றார். தான் வெற்றி பெற்றதை கொண்டாடுவதற்காக நகராட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இதையடுத்து பெண் உறுப்பினர்களை தவிர்த்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் மைசூரு மாவட்டம் டி.நரசிபுராவில் உள்ள தனியார் ரிசார்ட்டில்  ஒன்று கூடி மது விருந்து பார்ட்டியில் கலந்து கொண்டனர். இதில் நகராட்சி உறுப்பினர்கள் மது போதையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குடித்து விட்டு கும்மாளம் அடித்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது, வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்க நகராட்சி உறுப்பினர்கள் இதுபோல் குடித்து விட்டு கும்மாளம் அடிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பொதுமக்கள் நகராட்சி உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை