தொகுதி பங்கீடு தொடர்பான அதிமுக - பாஜக பேச்சுவார்த்தை நிறைவு
சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பான அதிமுக - பாஜக பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தரப்பில் எல்.முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.