அரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: அரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுவதை விமர்சித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தினால், அரசுக் கட்டணமே வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது அதிமுக அரசு! தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மீண்டும் போராடுகிறார்கள். அதிமுக அரசின் அரசாணைக்கு அவ்வளவுதான் மரியாதையா? கபட அரசு! எனக் குறிப்பிட்டுள்ளார்.