புதுச்சேரியில் மர்ம பொருள் வெடித்து சாலையில் நடந்து சென்ற பெண் படுகாயம்
புதுச்சேரி: புதுச்சேரி ஓதியம்பட்டு பகுதியில் மர்ம பொருள் வெடித்து சாலையில் நடந்து சென்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார். சாலையில் கிடந்த மர்ம பொருளை எடுத்தபோது திடிரென வெடித்ததால் ஆனந்தி என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ஆனந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.