சில ரயில் நிலையங்களில் உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே வாரியம் அனுமதி
டெல்லி: குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டும் உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க ஐ.ஆர்.சி.டி.சி-க்கு இந்திய ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின் ரயில் சேவை தொடங்கப்பட்டப்பின் ரயில்களில், உணவு வழங்குதல், ஏசி வகுப்பில் போர்வை வழங்குவது உள்ளிட்ட சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.