சில ரயில் நிலையங்களில் உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே வாரியம் அனுமதி

தினகரன்  தினகரன்
சில ரயில் நிலையங்களில் உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே வாரியம் அனுமதி

டெல்லி: குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டும் உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க ஐ.ஆர்.சி.டி.சி-க்கு இந்திய ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின் ரயில் சேவை தொடங்கப்பட்டப்பின் ரயில்களில், உணவு வழங்குதல், ஏசி வகுப்பில் போர்வை வழங்குவது உள்ளிட்ட சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை