மாதிகா தண்டோரே வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்த முடிவு

தினகரன்  தினகரன்
மாதிகா தண்டோரே வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்த முடிவு

தாவணகெரே: மாநிலத்தில் வாழும் மாதிகா தாண்டோரே வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி சதாசிவா ஆணையம் கொடுத்துள்ள அறிக்கையை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில மாதிகா தாண்டோர அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் தாவணகெரே மாநகரில் நடந்தது. இதில் தாவணகெரே, சித்ரதுர்கா, ஷிவமொக்கா, ஹாவேரி, பல்லாரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாதிகா தண்டோர  அமைப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சமூகநீதி உள்ளிட்ட துறைகளில் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நமது பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நீதிபதி சதாசிவா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அவ்வாணையம் அரசிடம் கொடுத்த சிபாரிசுகளை அமல்படுத்த வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாமல் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். தங்களின் கோரிக்கை வலியுறுத்தி மாநிலத்தின் அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களில்  போராட்டம் நடத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூலக்கதை