டெல்லிக்கு சவாரி வர மறுக்கும் டாக்சி டிரைவர்கள்

தினகரன்  தினகரன்
டெல்லிக்கு சவாரி வர மறுக்கும் டாக்சி டிரைவர்கள்

 புதுடெல்லி: செவ்வாயன்று நடந்த வன்முறையின் காரணமாக நேற்று சில பிரதான சாலைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளிலிருந்து மத்திய டெல்லிக்குள் செல்ல  பயணிகள் பலரும் வாடகை டாக்சிகளை புக் செய்தனர். ஆனால், பாதுகாப்பு கருதி டாக்சி ஓட்டுநர்கள் டெல்லி நருக்குள் வர மறுத்துவிட்டனர். குறிப்பாக, நொய்டா, பரிதாபாத், மற்றும் நொய்டாவில் வசிப்போர் பணியின் காரணமாக டெல்லிக்குள் வர கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

மூலக்கதை