இறுதி சடங்கிற்கு கட்டணம்
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில், 14 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இங்கு, கொரோனா பலி அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோருக்கு சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டிய இறுதிச் சடங்குகளுக்கு, புரோகிதர்கள், 10 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, அங்குள்ள ஹிந்துக்கள் புகார் கூறியுள்ளனர்.