தமிழகத்தில் கூட்டணி ஆட்சி பா.ஜ., பொறுப்பாளர் அதிரடி

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி பா.ஜ., பொறுப்பாளர் அதிரடி

சிக்கமகளூரு:''தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி நடத்தும்,'' என, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவிதெரிவித்தார்.

பா.ஜ., தேசிய பொதுச் செயலரும், அக்கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளருமான, சி.டி.ரவி, சிக்கமகளூரில் கூறியதாவது:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா, குணம் அடைந்து வருகிறார். அவரது சிறை தண்டனை முடிந்து, வரும், 27ல் விடுதலையாவார். அவர் குறித்து கூறுவதற்கு எதுவும் கிடையாது.அவரை புகழ்ந்தோ, ஆதரித்தோ பேசுவதற்கு எதுவும் இல்லை. சசிகலாவை, அ.தி.மு.க.,வினர் ஏற்றுக் கொள்வரா என்பதும் எனக்கு தெரியாது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., எங்கள் கூட்டணியில் இணைந்தது.
தமிழக சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடரும்.

பா.ஜ.,வினர், அ.தி.மு.க.,வினரை நாடி செல்லவில்லை. அவர்கள் தான், எங்களை நாடி
வந்துள்ளனர். இம்முறை சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ., - அ.தி.மு.க., இணைந்தே ஆட்சி அமைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை