மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை

தினகரன்  தினகரன்
மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை

புதுடெல்லி: நாட்டின் 72வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக, குடியரசு தினத்துக்கு முந்தைய நாள், நாட்டு மக்களிடம் ஜனாதிபதி உரை ஆற்றுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் இன்று இரவு 7 மணியளவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், குடியரசு தின உரையாற்றுகிறார். இது, ஆல் இந்தியா ரேடியோவிலும், தூர்தர்ஷனின் அனைத்து சேனல்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் ஒளிபரப்பு செய்யப்படும். அதன் பிறகு, இரவு 9.30 மணியளவில் அந்தந்த மாநில மொழிகளில் இது மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பப்படும். ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை