அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: கொரோனாவை அசாம் அரசு கையாண்ட விதம் பாராட்டுக்குரியது...பிரதமர் மோடி உரை.!!!

தினகரன்  தினகரன்
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: கொரோனாவை அசாம் அரசு கையாண்ட விதம் பாராட்டுக்குரியது...பிரதமர் மோடி உரை.!!!

திஸ்பூர்: அசாம் மாநிலம் சிவசாகரில் நடைபெற்ற நிகழச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பழங்குடியினர் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது. தொடர்ந்து, நிகழச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை இன்று நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இந்த நாளை \'பிரகரம் திவாஸ்\' என்று கொண்டாட நாடு முடிவு செய்துள்ளது. அவரது வாழ்க்கை இன்றும் நமக்கு உத்வேகம் தருகிறது என்றார். அசாமின் விரைவான வளர்ச்சி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. \'ஆத்மனிர்பர் அசாமுக்கு\' வழி இங்குள்ள மக்களிடையே \'ஆத்மவிஷ்வாஸ்\' (தன்னம்பிக்கை) வழியாகும். மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் மத்திய அரசின் \'ஆயுஷ்மான் பாரத்\' திட்டத்தின் பயனைப் பெறுகின்றனர்: அஸ்ஸாமிய மொழியைப் பாதுகாத்தல் மற்றும் அதன் இலக்கியங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட கொள்கைகளைச் செயல்படுத்துவதற்குப் பின்னால், அஸ்ஸாமிய கலாச்சாரத்தை பாதுகாப்பதை என்.டி.ஏ அரசு எப்போதும் முன்னணியில் வைத்திருக்கிறது.கொரோனா வைரசை அசாம் அரசாங்கம் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. தடுப்பூசி இயக்கத்தை அசாம் இப்போது முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் ஓடும் நீரை வழங்க மத்திய-மாநில இரட்டை இயந்திர அரசு செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மூலக்கதை