தடுப்பூசி வழங்கிய மோடி நன்றி கூறிய ஷேக் ஹசீனா

தினமலர்  தினமலர்

டாக்டா:கொரோனா தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் 5.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7966 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 20 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் நேற்று முன் தினம் வங்கதேசத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டன.இதுகுறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது: எங்களுக்கு தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அதேபோல் எங்கள் மக்களுக்காக மூன்று கோடி டோஸ் தடுப்பூசி மருந்துகளை இந்தியாவில் இருந்து வாங்குகிறோம்; அவை ஜன. 26ம் தேதிக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை