எல்லையோர பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி
புதுடில்லி :''எல்லை மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள, 1,100க்கும் மேற்பட்ட பள்ளிகளில், மாணவர்களுக்கு தேசிய மாணவர் படைக்கான பயிற்சி வழங்கப்படும்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடக்கும் தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:தேசிய மாணவர் படையை விரிவுபடுத்த, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
மதிப்பெண் வழங்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.