ஜோ பைடனின் உரை தயாரித்த இந்தியருக்கு குவியும் பாராட்டு

தினமலர்  தினமலர்
ஜோ பைடனின் உரை தயாரித்த இந்தியருக்கு குவியும் பாராட்டு

வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், ஜோ பைடன் ஆற்றிய உரையை தயாரித்த, இந்தியாவை பூர்வீகமாக உடைய வினய் ரெட்டிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் நேற்று முன் தினம் பதவியேற்றார். பின், நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். ஜனநாயகத்தின் முக்கியத்துவம், இன பேதத்தை ஒழிப்பது, ஒற்றுமையாக வாழ்வது, நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்வது என, அவரது உரை, மிகவும் உணர்வுப்பூர்வமாகவும், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.

ஜோ பைடனின் இந்த பேச்சு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக, பலரும் பாராட்டியுள்ளனர். அந்த உரையை தயாரித்துள்ள, தெலுங்கானா மாநிலத்தை பூர்வீகமாக உடைய வினய் ரெட்டிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.பைடன் துணை அதிபராக இருந்தபோது, அவரது உரையைத் தயாரிக்கும் தலைமை அதிகாரியாக வினய் பணியாற்றியுள்ளார்.

அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதும், பைடன் மற்றும் தற்போது துணை அதிபராக பதவியேற்றுள்ள, கமலா ஹாரிசுக்கு, வினய் ரெட்டிதான், உரைகளை தயாரித்து தந்தார்.வினய், மியாமி பல்கலையில் பட்டப்படிப்பும், ஓஹியோவில் சட்டப் படிப்பும் முடித்துள்ளார். தற்போது நியூயார்க்கில், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

மூலக்கதை