ரூ.40 கோடிக்கு சாலை பணி பெருங்குடி மண்டலத்தில் தீவிரம்

தினமலர்  தினமலர்
ரூ.40 கோடிக்கு சாலை பணி பெருங்குடி மண்டலத்தில் தீவிரம்

உள்ளகரம் ஜ பெருங்குடி மண்டலத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பில், 95 கி.மீ., துாரத்திற்கு தார், சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில், பாதாள சாக்கடை, குடிநீர், மின் கேபிள் புதைப்பு ஆகிய பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதற்காக, பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டன. இதனால், போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மழைக்காலத்தில் சகதியான சாலைகளில், இந்த பாதிப்பு அதிகம் காணப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் துவக்கப்பட்டது.பெருங்குடி மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும், 40 கோடி ரூபாய் மதிப்பில், 628 தார் சாலைகள், 84 கி.மீ., துாரத்திற்கும்; ஆறு வார்டுகளில், 11 கி.மீ., துாரத்திற்கு சிமென்ட் சாலைகளும் அமைக்கப்படுகின்றன.சட்டசபை தேர்தலுக்கு முன், இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை