ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,86,245-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7,142-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 8,77,443 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,660 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை