ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்...! ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழாரம்

தினகரன்  தினகரன்
ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்...! ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழாரம்

சென்னை: ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழாரம் சூட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் இலக்கை எதிர்த்து மிகப்பிரமாதமாக ஆடிய இந்திய அணி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை காபா மைதானத்தில் பதிவு செய்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது. தொடர்ச்சியாக 2வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றி பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. கடந்த 1988 முதலே காபா மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:  இந்த தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட ஓன்று, ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என புகழாரம் சூட்டியுள்ளார். இது சிறப்பு வாய்ந்த டெஸ்ட் தொடராக இருந்தது, இறுதியில் எப்போதும் ஒரு வெற்றியாளர் அல்லது தோல்வியுற்றவர் இருக்கிறார். இன்று டெஸ்ட் கிரிக்கெட் தான் வெற்றியாளர். இந்திய வீரர்கள்  மிகச்சிறந்தவர்கள். அடிலெய்ட் தோல்விக்குப் பின்னர் ஏற்பட்ட சண்டை குறிப்பிடத்தக்கதாக இல்லை. குறிப்பாக பும்ரா மற்றும்  ஜடேஜா போன்ற பெரிய வீரர்கள் காயத்தால் அவதிகுள்ளான பின்பும் இந்த வெற்றியை இந்திய அணி பெற்றது ஆச்சரியமானது. ரிஷப் பந்தின் ஆட்டம் உண்மையில் ஹெடிங்லேயில் பென் ஸ்டோக்ஸை எனக்கு நினைவூட்டியது.  புதிய நட்சத்திரங்களான சுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை இந்தியா உருவாக்கியுள்ளது. நாங்கள் மூன்று நாட்களில் வென்ற முதல் டெஸ்ட் போட்டியின் பின்னரும் இந்திய வீரர்கள் சிறப்பாக போராடி வென்றனர் என அவர் தெரிவித்தார்.

மூலக்கதை