விராலிமலையில் இன்று மக்கள் கிராம சபை கூட்டம் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விராலிமலையில் இன்று மக்கள் கிராம சபை கூட்டம் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

விராலிமலை: விராலிமலையில் இன்று மாலை மக்கள் கிராம சபை கூட்டம் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிமுகவை நிராகரிப்போம் எனும் தலைப்பில் 16 ஆயிரம் இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துவது என்று திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று பொதுமக்களிடையே குறைகளை நேரடியாக கேட்டு பேசி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 3 மணி அளவில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் விராலிமலை பிடிகே கல்லூரியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு உரையாற்றுகிறார்.

மாவட்ட எல்லையில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


.

மூலக்கதை