கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை

புதுடெல்லி: வங்கிகளில் கடன் வாங்கிய மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் கடன் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றின. இந்த வழக்குகளை மூடி மறைக்கவும், விசாரணையை தாமதப்படுத்தவும் சிபிஐ அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் நான்கு சிபிஐ அதிகாரிகள் சிக்கியுள்ளனர். சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி, குர்கான், மீரட், நொய்டா, கான்பூர், காசியாபாத் உள்ளிட்ட 14 நகரங்களில் சோதனை மேற்கொண்டனர்.

லஞ்சப்புகாரில் சிக்கிய சிபிஐ அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் பரிசோதனை நடைபெற்றது.

மேலும், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திலேய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் காசியாபாத் சிபிஐயில் டிஎஸ்பியாக பணிபுரியும் ஆர். கே. ரிஷி, மற்றொரு டிஎஸ்பியாக சங்க்வான், இன்ஸ்பெக்டர் கபில் தன்வந்த், ஸ்டெனோவாக பணிபுரியும் சமீர்குமார் சிங், ஆகிய நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர். சி. ஜோஷி கூறுகையில், ‘சிபிஐ அதிகாரிகள் நால்வர் மீதும் அதிகார துஷ்பிரயோகம் செய்தல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்ள லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது. இதில் சிபிஐ இன்ஸ்பெக்டர் கபில் தன்வந்த், ஸ்டெனோவாக பணிபுரியும் சமீர்குமார் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டிஎஸ்பி ரேங்க் அதிகாரிகள் ஆர். கே. ரிஷி மற்றும் சங்க்வான் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிபிஐ தனது அமைப்பின் அதிகாரிகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

நான்கு அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள எஃப். ஐ. ஆரில், குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆய்வாளர் தனது இரண்டு மூத்த டிஎஸ்பிக்கள் ஆகியோர் 2 நிறுவனங்களிடம் இருந்து குறைந்தது ரூ. 10 லட்சம் லஞ்சம் பெற்றனர். இதற்கு உடந்தையாக ஸ்டெனோகிராபர் சமீர் குமார் சிங் இருந்துள்ளார்’ என்று தெரிவித்தார்.


.

மூலக்கதை